முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b367

 பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் மீளெடுக்குமாறு அழைப்பு




 

இலங்கையில் நடைமுறையில் உள்ள மிக மோசமான சட்டமாக கருதப்படும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக மீளெடுக்குமாறு மீண்டும் சர்வதேச ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை அரசாங்கத்திடம் பயங்கரவத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது.


சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய வலைய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் கைதிகளை நியாயமான விசாரணைக்கு உட்படுத்தாமல், புனர்வாழ்வு என்ற பெயரில் தடுப்பில் வைக்க அனுமதிப்பதாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


இலங்கையில் பெரும்பாலும் சிறுபான்மையின மக்கள் உரிய செயன்முறை மறுக்கப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.


எனினும் அவர்களில் சிலருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என்பதுடன், பலர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் வரை காத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.


இவ்வாறான சூழலில், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளெடுப்பதுடன், புதிய விதிமுறைகளை மீளப் பெறுமாறும் அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாதவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும், சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?