முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b417

மனைவி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசுவதால் மனமுடைந்த கணவன் -குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் மங்கலம் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்தனர். சேலம் மாவட்டத்தில் சங்ககிரி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் மாஸ்டராக பணிபுரிந்து வந்திருக்கிறார் முருகன். இதையடுத்து அப்பகுதியிலேயே வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி வசித்து வந்திருக்கிறார். மனைவி அடிக்கடி யாருடனோ செல்போனில் அதிகநேரம் பேசி வருவதை கண்டித்து வந்திருக்கிறார். அவர் எத்தனையோ முறை கண்டித்தும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வருவதால் மனமுடைந்து போயிருக்கிறார் முருகன். இதனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு அதை வீடியோவாக எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்கான காரணத்தையும் வீடியோவில் அவர் தெரிவித்திருக்கிறார். இதையறித்து பதறிப்போன உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?