முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b426

தமிழர் தாயகத்திற்குள் நுழைந்த மற்றுமொரு நாடு - ரகசிய நகர்வு அம்பலம்
தமிழர் தாயகத்தில் உள்ள தீவகத்தில் சீனாவின் முதலீடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது சிறிலங்காவிற்கான பாகிஸ்தான் தூதுவரும் இரகசியமான முறையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanakaradnam) தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவிற்கு அருகில் உள்ள குறித்த தீவுப் பகுதிகளில் அதனை எதிரி நாடுகளின ஊடுருவலானது தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் பாரத தேசத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்திருக்கின்றார். வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா,கனடா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர் தேசங்களில் இயங்கக்கூடிய அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. கறுப்பு பட்டியலில் சேர்த்து இருக்கின்றது. அந்த அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற தொடர்ச்சியாக போராடுகின்ற அமைப்புகளை, கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்கு துணை போகின்ற அமைப்புகளாக முத்திரை குத்தி தடை செய்தனர். ஆனால் அந்த அமைப்புகளை தடை செய்து வைத்துக்கொண்டு அந்த அமைப்புக்களோடு பேசப்போகின்றோம் என்ற செய்தி நகைப்புக்கிடமாக எண்ணத் தோன்றுகின்றது. அரசாங்கம் முதலில் அந்த அமைப்புகளை தடைப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அத்தோடு அரசாங்கத்துக்கு ஊதுகுழலாக இணைந்து செயற்படுகின்ற பல அமைப்புகளும் வெளிநாடுகளில் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகளோடு அரசாங்கம் பேசுவார்களாக இருந்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையான தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் பலர் பங்கு கொண்டிருக்கின்றார்கள். இந்தப் இனப்பிரச்சினை விவகாரங்களை எங்களை விடுத்து புலம்பெயர் அமைப்புகளோடு பேசப்போகிறோம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் புலம்பெயர் அமைப்புகள் குறிப்பாக, சில நிபந்தனைகளை விதித்து இருக்கின்றன. இதய சுத்தியுடன் அரசாங்கம் தமிழர்களின் விடயத்தில் நேர்மையாக நீதியாக நடக்கவேண்டும். வெளிநாடுகளிலே ஒரு பேச்சு இலங்கையிலே இன்னொரு பேச்சு. இப்படியாக இரட்டைவேடம் போடுகின்ற இந்த அரசியலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?