முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b364

 உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவி தொடர்பில் மாணவர் ஒருவரின் உருக்கமான பதிவு!


 

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவியான சாருகா நேற்று முன் தினம் கற்றல் சுமை காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவரான தர்சிகன் இது தொடர்பில் உருக்கமான பதிவு ஒன்றை முகநூலில் பதிவிட்டுள்ளார்.


அதில் , தற்கொலை என்பது தான் மன அழுத்தங்களுக்கான தீர்வு அல்ல. தற்கொலைகளை வெல்வதற்கான பல வழிகள் உள்ளன. மன அழுத்தங்களின் போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.


அத்துடன் எம்மை நாம் காப்பற்றிக்கொள்ள நான் நினைப்பது இரண்டே வழிதான்.


1) சிறந்த நண்பர்களை சேகரித்து வையுங்கள்.


நண்பர்கள் என்ற உடன் நாம் நினைப்பது எம்முடன் மருத்துவபீடத்தில் இல் கற்கும் மாணவர்களை மட்டும்தான். இது முற்றிலும் தவறான எண்ணம். மருத்துவத்துறைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 75%க்கு மேற்பட்டவர்கள் கற்றலில் மிகுந்த சுயநலக் குணம் உடையவர்கள் என்பது முற்றிலும் உண்மையான ஒன்றே.


எனவே நாம் தேர்வு செய்யும் நண்பர்கள் சிறிய வயதில் இருந்து எம்முடன் கற்ற நல்ல நண்பனாகவோ இல்லாவிட்டால் வேறு ஏதாவது துறைகளில் கற்கும் நண்பனாகவே இருக்கலாம். அதற்காக நான் மருத்துவத் துறையில் இல் கற்பவர்களை நண்பர்களாக்க வேண்டாம் என்று கூறவில்லை  , ஆனால் நாம் இதற்குள்ளேயே தேடி சிறந்த நண்பர்களை பெறுவதில் பெரும்பாலும் தோற்று விடுகின்றோம்.


 2) உங்களிற்கு உதவக்கூடிய மனப்பாங்குள்ள சிரேஷ்டமாணவர்களுடன் உடன் தொடர்பை பேணுங்கள்.


நாம் அனைவரும் செய்யும் பெரிய தவறு எமது மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவர்களிடம் மட்டும் உதவி கேட்பது, தொடர்பை பேணுவது. நாம் பல்கலைக்கழகம் சென்ற சிறிது காலத்திலேயே எமக்கு பிடித்த, எமக்கு உதவக்கூடிய சிரேஷ்ட அண்ணா அல்லது அக்காவை நாங்கள் இனங்காணலாம்.


அவர்கள் வேறு மாவட்டமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. அவர்களுடன் உங்களுடையை கல்வி சார்ந்த விடையங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?