முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b411

பார்த்தீபன் இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்… திலீபனிற்கு தீபம் ஏற்றுவோரே பார்த்தீபனின் பாதம் தொழுவோரே ஈகச் சிகரத்திற்கு மாலை தொடுப்போரே அதிசய வள்ளலுக்காய் கசிகின்ற நெஞ்சோரே மனதிலேற்றுங்கள் எங்கள் பார்த்தீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறான் சிறுகச் சிறுகச் சேர்த்து நிமிரக் கட்டிய மனையும் உயிரைப் பிரியும் பொழுதில் தந்தை உயிலாய்த் தந்த வளவும் இன்பம் பெருகப் பெருக நாங்கள் ஓடித்திரிந்த தெருவும் உள்ளம் உருக உருகக் கண்ணீர் விட்டுப்பிரிச்ச ஊரும் திரும்பக் கிடைக்கும் காலம் வரைக்கும். எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். நாளும் பொழுதும் கண்ணைக் கரைத்து நாளை வருவார் நானை வருவார் என்றே தங்கள் இதயம் வதைத்து கொலைஞர் பிடித்த உறவை நினைத்துக் கதறும் மனங்கள் இருக்கும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். சதியும் வெறியும் ஒன்றாய்க் கலந்து கருணை கனிமை எதுவும் மறந்து எங்கோ பிறந்து மனிதம் துறந்து எங்கள் மண்ணில் மரணம் விதைத்து துயரச் சுமையுள் எம்மைத் திணிக்கும் கொடுமைப் படைகள் எரியும் வரைக்கும்இ எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். உயிரை உடலை உறவைத் துறந்து உணர்வு முழுதும் தமிழைக் கலந்து விடியும் காலைக் கதிராய் விரிந்து தமிழர் தேசக் கனவை வரித்து மண்ணின் மானம் பெரிதாய் மதித்து மண்ணுள் உறங்கும் மாந்தர் கேட்கும் விடுதலை வந்து சேரும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். சொந்த சுகங்கள் அனைத்தும் துறந்து துணிவுச் சிறகை மனதில் அணிநது தலைவன் திசையில் பயணம் தொடர்ந்து அணியாயத் திரளும் தமிழர் படையில் எழுச்சித் தீபம் எரியும் வரைக்கும் மக்கள் புரட்சி மண்ணில் வெடித்து தமிழர் முழுதும் புலியாய் விரைந்து தாயகமெங்கும் போரிடும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். திசைகள் எதிலும் பகையை முடித்து நிலங்கள் முழுதும் விரைவில் பிடித்துப் புலியின் கொடியை கருத்தில் எழுத்து வெல்லும் சேதி சொல்லும் வரைக்கும் எங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான். ஆகவே… பசித்த வயிற்றோடு பாடையேறிய எங்கள் பார்த்தீபன் கனவுகள் மேடையேறி முழங்கவல்ல தீபமேற்றி வணங்கவல்ல களத்திலேறிப் பகைமுடிக்க நெருப்பிலேறிக் கொடிபிடிக்க தீர்வெடுங்கள் திலீபனிற்குத் தேவையான உணவை உங்களால் தான் சமைக்க முடியும். – செந்தோழன் –

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?