சிறிலங்கா அரச அதிபரின் பகிரங்க அழைப்பிற்கு புலம்பெயர் தமிழர்களின் பதில் என்ன? வெளியான தகவல்
தமிழ் மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கள் குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சில தமிழ் சமூகத்தினர் வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக உள்ளக பொறிமுறை ஊடாக, நீண்ட காலமாக நிலவி வருகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகத்தினருக்கு விடுத்துள்ள அழைப்பை புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்தின் 95 சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வரவேற்றுள்ளதாக ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறைகளில் நீண்டகாலமாக இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துரிதமாக விசாரணை செய்து விரைவாக விடுதலை செய்வதற்கு தான் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அரச தலைவர் அளித்த உறுதிமொழியை ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் வரவேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போனோர் விடயத்தில் ஆரம்பம் முதலே மிகவும் கரிசனையாகச் செயற்பட்டுவரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ அது தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் வழங்கிய உறுதிமொழியை தமிழ் அரசியல் தலைவர்கள் உட்பட மக்கள் அனைவரும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கள் தொடர்பான வரவேற்பு பதிவுகளை புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பலரும் தமது முகநூல் மற்றும் டுவிட்டர் ஊடாக பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோன்று டென்மார்க் நகரில் வாழும் தமிழர் இது குறித்து தெரிவிக்கையில், அரச தலைவரின் அறிவிப்பை ஒரு நல்லதொரு வாய்ப்பாக தமிழ்மக்கள் கருத வேண்டும். இதனை சரிவர புரிந்துகொண்டு செய்து முடிப்பது தமிழ் மக்களது தலைமைகளின் கைகளிலே உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்