முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b386

 யாழில் யுவதி ஒருவரை காதலித்த இரு காதலர்கள்! பிரித்தானிய காதலரின் நிலை


யாழில் ஒரு யுவதி, இரண்டு பேரை காதலித்ததால், இருவரும் நேரில் அழைக்கப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு கழுத்தை நீட்டியுள்ளார். சினிமா பாணியிலான இந்த முக்கோண காதல் கதை, கடந்த வாரம் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியொன்றில் நடந்துள்ளது.


யாழில் இயக்கப்பட்ட குறும்படங்கள் சிலவற்றில் நடித்த யுவதியொருவர், யாழ் நகரிலுள்ள புகைப்பட கலையகத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்கள் இந்த காதல் நீடித்த நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் முல்லைத்தீவு இளைஞன் ஒருவடன் யுவதிக்கு பேஸ்புக் காதல் உருவாகியுள்ளது.


பேஸ்புக் காதல் தெய்வீக காதலாக உருமாற, புகைப்பட கலையகத்தில் பணியாற்றும் இளைஞனை, யுவதி கைகழுவி விட்டுள்ளார். எனினும், தன்னுடைய காதலும் தெய்வீக காதல்தான் என்பதை புகைப்படக்காரரும், யுவதியிடம் நிரூபிக்க முயன்றுள்ளார். தனது உடலில் யுவதியின் பெயரை கீறி, இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.


அவ்வளவுதான் யுவதியின் மனம் இளகி விட்டது.கைக்குள்ளேயே ஒரு தெய்வீக காதலனை வைத்துக் கொண்டு, எதற்கு பிரித்தானியாவிற்கு கடலை போட வேண்டுமென நினைத்து, பழைய காதலனுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.


விடயத்தை அறிந்த பிரித்தானிய காதலன் பதறிப் போனார். விட்டால் புகைப்படக்காரர் அழைத்துச் சென்று விடுவார் என நினைத்து, கடந்த மாதம் இலங்கை வந்துள்ளார். யுவதியை தொடர்பு கொண்டு உடனடியாக திருமணம் செய்ய கேட்டுள்ளார்.


யுவதி மறுத்ததும், யுவதியின் வீட்டுக்கு சென்று, முறைப்படி பெண் கேட்டுள்ளார். விடயத்தை அறிந்ததும், புகைப்படக்காரனும் யுவதியின் வீட்டில் பெண் கேட்டு சென்றார்.



 

தமது மகளின் காதலர்கள் என அடுத்தடுத்து இரண்டு பேர் பெண் கேட்டு வந்ததால், வீட்டுக்காரர் தடுமாறிப் போயினர். மகளிடம் விசாரித்த போது, இருவரில் யாரை திருமணம் செய்வது என தெரியாமல் அவர் திண்டாடிக் கொண்டிருந்ததை அறிந்தனர்.


திருமண விவகாரத்தில் இரண்டு ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், கடந்த வார தொடக்கத்தில், கொக்குவில் பகுதியிலுள்ள யுவதியின் மாமாவின் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


இரண்டு தரப்பின் நண்பர்கள் சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். யுவதியை யார் திருமணம் செய்வது என்பது பற்றி, இருவரும் பேசி, ஒருவரை தெரிவு செய்யும்படி கேட்கப்பட்டிருந்தது.



 

சில மணித்தியாலங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், புகைப்படக்காரர் இந்த விவகாரத்திலிருந்து ஒதுங்குவதாக கூறினார். கடந்த வாரம் பிரித்தானிய மாப்பிள்ளைக்கும், காதலிக்கும் இடையில் திருமணம் நடந்தது.


 அன்பின் எமது சகோதர உறவுகளிற்கு பீற்றர் அவர்களின் அன்பான வேண்டுகோல் முகம் தெரியால் நீங்கள் பலரை விரும்புவதை தவிர்க்கவும் ஏனனெனில் இறிதில் நீங்கள் பணம் உள்ளவர்களை இலக்கு வைப்பதால் மற்றவர் மனநிலை பாதிக்கப்பட்டு ஒரு வேளை அவர் தற்கொலை செய்யலாம்.


ஏற்கனவே நாம் சிறுபாண்மை இனம் இப்படியான நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் எமது இனம் அழிந்துவிடும் எனவே விடலை பருவமான யுவதிகள் அவதானமாக செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?