முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b381

 விடுதலைப்புலிகளின் பெயரைக்கேட்டாலே அஞ்சிப் பதுங்கியவர் 'லொஹான் ரத்வத்தே' - சரத் பொன்சேகா



தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைக்கேட்டாலே அஞ்சிப் பதுங்கிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகின்றமை முதுகெலும்பற்ற செயற்பாடென முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் சட்டநடவடிக்கை என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.


இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,


இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். அவரது தந்தையான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமரர் அனுருத்த ரத்வத்த அன்றைய நாட்களில் போர்க் களத்திற்கு விஜயம் செய்து எம்மையும் சந்திப்பார்.


ஆனால் அவர் மீதான மதிப்பினை இழக்கச் செய்கின்ற அளவுக்கு தற்போது லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு அமைந்துள்ளது.



 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளைப் பார்த்து லொஹான் ரத்வத்த ஓடி ஒளிந்திருப்பார். மரண பயத்தில் இருந்த நபர் அவர்.


ஆனால் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளை சென்று சந்தித்து அவர்களை முழந்தாலிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார். இது சண்டித்தனமல்ல. இதுபோன்ற செயலை தைரியசாலிகளும் செய்வதில்லை. மாறாக இழிவு சிந்தனை கொண்டவர்களே இதனை செய்வார்கள்.


சிறைச்சாலையில் நானும் இருந்துள்ளேன். அங்கு தமிழ்க் கைதிகள் அனுபவிக்கின்ற துன்பங்களை அறிந்துள்ளேன். இதுபோன்ற நபர்கள் மீண்டும் வந்து மிரட்டினால் கைதிகள் அனைவரும் இணைந்து தாக்குதல் நடத்தி தூக்கியெறிய வேண்டும்.


அப்படி செய்தால் நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் கைதிகளுக்காக நிற்பார்கள். இதுபோன்ற ஈனச்செயலை செய்தவர்களுக்கு மன்னிப்கே கிடையாது என்றார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?