முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 115 அறிவை இழந்த நிலையில் தமிழர்கள்ளா?

 

ரணில் நல்லவரா கெட்டவரா..!

 By Sumithiran 3 மணி நேரம் முன்ரணில் நல்லவரா கெட்டவரா..! | Ranil Is Good Or Bad
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று அதிபர் அரியாசனத்தில் ஏறிய கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை சீரழித்து சின்னாபின்னப்படுத்தி சிங்கள மக்களின் கோபத்திற்கு ஆளாகி ஆட்சிக்கதிரையை விட்டு ஓடி நாடு நாடாக சுற்றித்திரிந்தது வரலாறு.

ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்து கட்சிக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க, இன்று நாட்டின் அதிபராகியமை அவருக்கு அடித்த அதிஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

கடும் பொருளாதார சிக்கலில்


கடும் பொருளாதார சிக்கலில் இருந்த நாட்டை ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட வைத்தவர் ரணில் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

எரிபொருளுக்கு வரிசை, அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசை என எல்லாவற்றுக்குமே இருந்த வரிசை யுகத்தை மாற்றி மக்களை ஓரளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீட்டவர் அவர்தான்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில்

ரணில் நல்லவரா கெட்டவரா..! | Ranil Is Good Or Bad

இந்த நிலையில் அவர் இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள காணி அதிகாரங்களை தர மாட்டேன் என்பதுவும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும் என கூறுவதும் தான் தமிழர் பிரதிநிதிகளை கொதிப்படைய வைத்துள்ளது.

ஆட்சிக் கதிரையை  நடத்தி முடிக்கும் வரை

ரணில் நல்லவரா கெட்டவரா..! | Ranil Is Good Or Bad

கடந்த நல்லாட்சி அரசில் மைத்திரிபால சிறிசேன அதிபராகவும் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்தபோது எவ்வித முன்நிபந்தனையும் இல்லாமல் அந்த ஆட்சியின் இறுதிக்காலம் வரை முண்டுகொடுத்து ஆட்சிக் கதிரையை அவர்கள் நடத்தி முடிக்கும் வரை ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளுக்கு ரணில் நல்லவர்.

ஆட்சிக்காலத்தின் இறுதிக்காலத்தில் மைத்திரியின் அரசியல் விளையாட்டால் 50 நாட்கள் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது அவரை விரட்டி மீண்டும் ரணிலை பிரதமராக்கியபோது ரணில் நல்லவர்.

வடக்கிற்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு ரணில் வந்தபோது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ஊடகங்களில் புன்முறுவலுடன் அவர்களின் படம் வரும்போது ரணில் நல்லவர்.

இப்போது அதிபராகி 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ரணில் கதைத்தால் அவர் கெட்டவர்.

ஐந்து வருட ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டமும் இல்லை. இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சியும் இல்லை.ஆனால் பொங்கலுக்கு தீர்வு,தீபாவளிக்கு தீர்வு எனும்போது மட்டும் ரணில் நல்லவர்.

இப்போது மட்டும் ரணில் கெட்டவர்.

இதில் உண்மை எது ரணில் நல்லவரா கெட்டவரா...!

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?