முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 109 பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம் ! இரு மாணவர்கள் பலி | IBC TAMIL

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்)

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்) | Tense Situation In University Of Vavuniya
Vavuniya
 11 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்நிலையில் இரு மாணவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவத்தால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று(17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அவர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?


மேலும் தெரியவருகையில், வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள பாரிய நீர் நிரம்பிய கிடங்கில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளனர்.

இதனை அவதானித்த ஏனைய மாணவர்கள் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது குறித்த பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும், பொதுமக்கள் ஆகியோர் மூழ்கியவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினர் மற்றும் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

ஒரு மணிநேரத்தின் பின்னர் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் ஏற்கனவே அவர்கள் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாத்தில் கல்விகற்கும் 15மற்றும் 16வயதை உடைய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

குழப்பமான சூழ்நிலை

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்) | Tense Situation In University Of Vavuniya

பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் பலி - துணைவேந்தர் மீதும் தாக்குதல்(படங்கள்) | Tense Situation In University Of Vavuniya

இதனை அவதானித்த குழுவொன்று அவர் மீது தாக்குதலை முன்னெடுத்தது. இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வருகைதந்த விசேட அதிரடிப்படையினர் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், காவல்துறையினரின் பாதுகாப்புடன் துணைவேந்தர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?