யாழ் சுன்னாகத்தில் அடித்து கொல்லப்பட்ட குடும்பஸ்தர்! வெளியான புதிய தகவல்யாழ் சுன்னாகத்தில் அடித்து கொல்லப்பட்ட குடும்பஸ்தர்! வெளியான புதிய தகவல் | Jaffna Chunnakam Family Man Kill 2 Suspects Arrest
By Shankar 3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில்,19 வயது யுவதியிடம் ஓடிய 54 வயது ஆண்ணொருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் நேற்றையதினம் ஊருக்கு வரவளைத்தனர்.
இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், படுகாயமடைந்த நிலையில் அந்த ஆண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றையதினம் (07-08-2023) சுன்னாகம் பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இவ்வாறான நிலையில், தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யுவதியின் தந்தை இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தடயச் சான்றான, உயிரிழந்த நபரின் சாறத்தை எரித்த குற்றச்சாட்டின் கீழ் யுவதியின் அண்ணாவையும் இன்று பொலிஸார் (08) கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தினை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் இன்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார்.
அதன்பின்னர் உயிரிழந்தவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்