முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'e 61 அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்'காலத்தைக் கடத்தும் கிழட்டு நரி?

 

'அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம்' - சம்பந்தன் எடுத்த நடவடிக்கை

 By Vanan 58 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

தமிழ் மக்களுக்கு நான் சொல்லக்கூடியது எல்லாம் “பொறுமையாக இருங்கள் - அரசியல் தீர்வு விவகாரத்தில் மாற்றம் ஏற்படும்" என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின் பின்னர் நடத்திய சர்வகட்சி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையிலும், அரசியல் தீர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைமை தொடர்பிலும், அதில் மாற்றம் தேவை என்ற அடிப்படையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார செயலாளர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு தான் எழுதிய கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தக் கடிதம் நேற்று(2) அவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் உறுதிப்படுத்தினர் என சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நேற்று முன்தினம்(1) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போதே இரா. சம்பந்தனால் இந்திய தூதரிடம் இக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம்


அண்மையில் அனுப்பப்பட்ட கடிதம் - மோடிக்கு நீண்ட கடிதம் அனுப்பினார் சம்பந்தன்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் தீர்வு விவகாரத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ளது. அதில் உள்ள 13 ஆவது திருத்தம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை 13ஆவது திருத்தத்தில் உள்ள பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

அரசியல் தீர்வு ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், அதில் கட்டாயம் மாற்றம் தேவை என வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதியிட்டுள்ளேன்” - என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?