முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 74 தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்:

 

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்!

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்! | Jaffna Accident Woman Dies Due To Driver S Sleep
 By Shankar 40 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

குடும்பப் பெண்ணொருவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த நிலையில் அவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் மீசாலையில் நேற்றைய தினம் (05-08-2023) இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியிலிருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தார்.

இதன்போது வவுனியாவில் இருந்து வந்த கார் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் மீது மோதி, அதன்பின்னர் அருகில் நின்ற மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்! | Jaffna Accident Woman Dies Due To Driver S Sleep

இந்த விபத்தின் போது முறிந்த மரமானது அங்கு பேருந்துக்காககாத்திருந்த பெண்ணின் மீது விழுந்துள்ளது.

இந்த நிலையில் படுகாயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் மீசாலை பகுதியை சேர்ந்த 56 வயதான மகேஷ்வரன் நவரஞ்சிதம் என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்: சாரதியால் உயிரிழந்த குடும்பப் பெண்! | Jaffna Accident Woman Dies Due To Driver S Sleep

மேலும் இந்த விபத்து சாரதியின் தூக்க கலக்கத்தினாலே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?