முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 104 விடுதலைப் புலிகளின் தலைவரின் அக்கா சில மணிநேரங்களில் தொடர்பு கொண்டா





விடுதலைப் புலிகளின் தலைவரின் அக்கா சில மணிநேரங்களில் தொடர்புகொண்டார்! அரசியல் முக்கியஸ்தர் தகவல்(Video)

 By Chandramathi 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Join us on our WhatsApp Group

நான் அறிந்த வகையில் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருக்கலாம். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,''2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தேசிய தலைவர் பிரபாகரனின் பெற்றோர் இராணுவத்தின் பிடியில் சென்றார்கள். அதன் பின்னர் பலாங்கொடை இராணுவ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டார்கள்.


இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை காலமானார். இந்த தகவலை கேள்விபட்டவுடன் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது. அதனை விசாரிக்க வேண்டும் என அப்போதைய ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை முன்வைத்தேன்.

இதனை தொடர்ந்து சில மணிநேரத்திலே விடுதலைப் புலிகளின் தலைவரின் அக்கா கனடாவிலிருந்து என்னை தொடர்பு கொண்டார். தந்தை இறந்துவிட்டார் தாயார் தனியாக இருப்பார் என என்னிடம் அழுதார்.

பின்னர் தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதி கிரியைகளை நான் செய்தேன். இதன் பின்னர் மதிவதனியின் சகோதரி என்னை தொடர்பு கொண்டார். நாங்கள் இருவரும் சந்திப்பது பற்றி உரையாடினோம்.

இந்த அடிப்படையில் தான் நான் கூறுகின்றேன் விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் உயிருடன் இருப்பார்கள். ஆனால் அதை நான் சவாலுக்குட்படுத்த விரும்பவில்லை.''என கூறியுள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?