முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 84 தமிழர்களை குறி வைக்கும் சிங்களக்காடையர்கள்?

 

இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை - பொலிஸாரிடம் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள்

 By Vethu 2 மணி நேரம் முன்இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை - பொலிஸாரிடம் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள் | Newly Married Couple Death In Nuwara Eliya Today
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Join us on our WhatsApp Group

நுவரெலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளம் தம்பதி கடந்த 08 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் வசிக்கும் என்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா என்ற தம்பதியே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதி, கணவரின் தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், தனது மகன் தனது மருமகளை சுட்டுக் கொன்றபோது, ​​அயலவர்களிடம் உதவி பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே தாய் ஓடியதாகவும், வீடு திரும்பியபோது, ​​தனது மகனும் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

வாய்த்தர்க்கம் 

இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை - பொலிஸாரிடம் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள் | Newly Married Couple Death In Nuwara Eliya Today

“மகன், மருமகள் மற்றும் நானும் தனியான வீட்டில் வசித்து வருகின்றோம். அன்றைய தினம் இரவு மகனுக்கும், மருமகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் இரத்த காயங்களுடன் கிடந்தார்.

மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து விட்டதாகவும் , யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.

வெடிப்பு சத்தம்

இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை - பொலிஸாரிடம் தாயார் வழங்கிய முக்கிய தகவல்கள் | Newly Married Couple Death In Nuwara Eliya Today

நான் அயலவர்களை அழைப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது, பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து காணப்பட்டனர் ” என தாயார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மூலமே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நீதவான் விசாரணைக்கு பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

   சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?