முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 78 தமிழர்களை கொதி நிலையில் வைத்துயிருக்க விரும்பும் சிங்கள அரசு?

 

தமிழர்களின் முக்கிய பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற முயற்சி? பகீர் தகவல்

 By Shankar 2 மணி நேரம் முன்தமிழர்களின் முக்கிய பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற முயற்சி? பகீர் தகவல் | Mullaitivu Tamils Area Efforts Settle Sinhalese
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

முல்லைத்தீவு மாவட்டம் நாயற்று பகுதிக்கு தெற்கே உள்ள புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் சிங்களவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில்,


புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் குடியேறியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு கடல் தொழிலுக்கான அனுமதி கடல் தொழில் திணைக்களத்தால் வழங்கப்பட போவதாகவும் சிங்கள மீனவர்கள் தொழில் செய்வதற்கான வாடிகள் அமைக்கும் பொருட்கள் குறித்த கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அப்பகுதியில் இருக்கும் தமிழ் மீனவர்களால் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ் விடயம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டதுடன், மீனவ பிரதிநிதிகள் சிலரிடம், தொழில் செய்யும் எமது மீனவர்களுடனும் கலந்துரையாடிய போது 150 படகுகள் வரையில் குடும்பங்களாக இங்கே வந்து தொழில் செய்ய இருப்பதாகவும் வாடிகள் அமைப்பதற்கான பொருட்கள் குறித்த இடத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும், சில தினங்களுக்கு முன்னர் இந்த இடங்களை பௌத்தப் பிக்கு ஒருவரும் தனது குழுவினருடனும் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் இது ஒரு குடியேற்ற முயற்சி என தெரிவித்துள்ளார்கள்.

தமிழர்களின் முக்கிய பகுதியில் சிங்களவர்களை குடியேற்ற முயற்சி? பகீர் தகவல் | Mullaitivu Tamils Area Efforts Settle Sinhalese

இந்நிலையில், இன்று (07-08-2023) முல்லைத்தீவு மாவட்ட கடற் தொழில் நீரியல் வள உதவி பணிப்பாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போது அவர் வெலிஓயாவில் இருக்கும் மீனவர்கள் தாம் படகுமூலம் தொழில் செய்யப்போவதாகவும் நான்கு படகுகளுக்கு புலிபாய்ந்த கல் என்ற இடத்தில் அனுமதி தரும்படி கோரியுள்ளதாகவும் அத்தோடு குறித்த விடயம் தொடர்பாக கொழும்பில் கடற்தொழில் அமைச்சில் டிஜிஐ தாம் சந்திக்க செல்வதாகவும் வெலிஓயாவை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த விடயத்தினால் எமது மீனவர்களுக்கான இடங்கள் போதாத நிலை பற்றியும் இவ்வாறு குடியேற்ற வாசிகள் என்று ஒவ்வொரு இடமாக கொடுத்துக் கொண்டு போனால் எமது மீனவர்களின் நிலைமை என்ன என்பதையும் இப்படியான திணிப்பை எமது தமிழ் மீனவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் சுட்டி காட்டியதோடு வாடிகள் அமைப்பதற்கான அனுமதி என்பது பிரதேச செயலகத்தினாலேயே வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?