முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e66 இலங்கையில் கொலை கொள்ளை அதிகரிப்பு?

 

வீட்டில் தனிமையாக இருந்த பொலிஸ் அதிகாரி படுகொலை

வீட்டில் தனிமையாக இருந்த பொலிஸ் அதிகாரி படுகொலை | Police Officer Killed In Sri Lanka
 By Vethu 20 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Join us on our WhatsApp Group

கந்தானை பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது வீட்டிலேயே கைகால்களை கட்டி தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை வெலிகம்பிட்டிய கந்தவத்தை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கங்காதரன் சங்கரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். மனைவி சில காலங்களுக்கு முன் இறந்துவிட்டதாலும் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பெறுமதியான பொருட்கள்


வீட்டில் இருந்த பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கந்தானையில் உள்ள வீட்டில் தனது தாத்தாவைப் பார்க்க வந்தபோது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அவரது பேரன் இது குறித்து  பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அழுகிய நிலையில் சடலம்


வீட்டில் தனிமையாக இருந்த பொலிஸ் அதிகாரி படுகொலை | Police Officer Killed In Sri Lanka

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டின் சமையலறையில் கைகால்கள் கட்டப்பட்டு தரையில் வீசப்பட்ட நிலையில் பாதி அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?