முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 728 கூட்டமைப்புக்குள் சர்ச்சையை

கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய ரகசிய அழைப்பு! மூடிய அறைக்குள் நடந்தது என்ன..! (காணொளி)
யாரை அதிபராக தெரிவுசெய்ய வேண்டும் என்று எமது கட்சிக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஆனால், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை, மக்களின் தேவை மற்றும் இனப் பிரச்சினை என்பவற்றை அடிப்படையாக கொண்டே தமது தீர்மானம் அமைந்திருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பின் தீர்மானம் ''இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான் என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணமாகும். இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே அதிபர் தெரிவில் எமது முடிவு காணப்பட்டது. சஜித் உட்பட பலர் அதிபர் தேர்தலில் கலந்துகொள்ள இருந்து பின்னர் தங்களின் முடிவுகளை மாற்றி கொண்டனர். இதனாலேயே அதிபர் தெரிவு நடப்பதற்கு முதல் நாள் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யலாம் என தீர்மானிக்கபட்டது. அண்மையில் ஐ.நா சபையிலும் இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை இல்லை என கூறும் வகையில் ஜி.எல் பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தான் எங்களுடைய யுக்தி அமைந்தது. இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான் அதாவது இலங்கையில் நடந்தது இனப்பிரச்சினை தான் என அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதே எமது எண்ணம்.”எனக் கூறியுள்ளார். அதிபர் தெரிவின் போது கூட்டமைப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய ரகசிய அழைப்பு, மூடிய அறைக்குள் என்ன நடந்தது என அவர் தெரிவிக்கும் விடயங்களை காணொளியில் காண்க,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?