ஆரம்பத்தில் ரணிற்க ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பினரின் மனமாற்றத்திற்கான காரணத்திற்கு காரணமாக பின்னால் நிற்பது யார் என்பதை மக்கள் அறிவார்கள்.
துரோகம் இளைத்தவனிற்கு இரண்டாவது முறை ஆதரவு அளிக்கக்கூடாது என்பது பெரும்பாண்மை தமிழர்களின் சிந்தனை.நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டளஸ் அழகப்பெரும - கூட்டமைப்பு பூரண ஆதரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிபர் வேட்பாளர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சஜித், டளஸ் கலந்துரையாடலில் பங்கேற்பு
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டளஸ் அழகப்பெரும - கூட்டமைப்பு பூரண ஆதரவு | Sri Lanka Presidential Election Tna Support Dullas
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட சஜித் அணியினர் கூட்டமைப்பிடம் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டளஸ் வெற்றிபெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டளஸ் அழகப்பெரும - கூட்டமைப்பு பூரண ஆதரவு | Sri Lanka Presidential Election Tna Support Dullas
இதன் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருமித்த ஆதரவுடன் அதிபர் வேட்பாளர் டளஸ் அழகப்பெரும வெற்றிபெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பினர் முன் வைத்த நிபந்தனைகள்
இதன் போது கூட்டமைப்பினர் முன் வைத்த நிபந்தனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை ,காணி அபகரிப்பு, மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் காணி அபகரிப்பு , உடனடியாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
எனினும் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சஜித் அணியினர் எழுத்து மூலம் வழங்கியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதிபர் வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்