தமிழர் அபிலாஷைகளையும் உள் வாங்குங்கள் போராட்டகாரர்களிடம் மனோ கணேசன் கோரிக்கை
தமிழர் அபிலாஷைகளை உள் வாங்குங்கள்
“நாட்டின் அரசியல் கலாசாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என முன்னிலை சோஷலிச கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் கூறுகிறார்.
இதுவே எமது கொள்கையாகவும் இருக்கிறது. இதனாலேயே நாம் எப்போதும் ராஜபக்ச அரசியல் கலாசாரத்தை எதிர்த்து வந்துள்ளோம்.
தமிழர் அபிலாஷைகளையும் உள் வாங்குங்கள் போராட்டகாரர்களிடம் மனோ கணேசன் கோரிக்கை | Mano
ஆனால், இந்த உத்தேச புதிய அரசியல் கலாசாரம், தமிழர் அபிலாஷைகளையும் வெறும் ஒரு சில கோஷங்களுக்கு அப்பால் சென்று, கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதை போராட்டக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு குமார் குணரத்தினத்தின் முன்னிலை சோஷலிச கட்சியும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது;
ஒடுக்கு முறையை சந்தித்த தமிழர்கள்
அரசியல் சட்டங்களுக்கு அப்பால் மக்கள் சக்தி உருவாகியுள்ளது. அந்த சக்தியின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் கடமையாகின்றது. அது உண்மை. ஆனால், இதே விதமான சட்டத்துக்கு அப்பால் சென்றுதான், கடந்த காலங்களில் தமிழர்கள் ஒடுக்கு முறையை சந்தித்தார்கள். இப்போதும் சந்திக்கிறார்கள்.
ஆகவே மக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்ட மக்கள் சபைகள் உருவாக்கப்படட்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தீர்வுகள் வரட்டும். நாமும் அவற்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
முதலில் கோட்பாடுகள் வர வேண்டும்
ஆனால் சட்டங்கள் வரமுன் அவற்றுக்கு அப்பால் முதலில் கோட்பாடுகள் வர வேண்டும். அவையே பின்னர் அரசியலமைப்பில் இடம்பெறும். இப்போது போராட்டக்காரர்கள் மத்தியில், தமிழர்களின் தேசிய அபிலாசைகள் தொடர்பில், கோட்பாடுகளை நாம் காணவில்லை.
தமிழர் அபிலாஷைகளையும் உள் வாங்குங்கள் போராட்டகாரர்களிடம் மனோ கணேசன் கோரிக்கை | Mano
எமக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு போராட்டக்கார அமைப்புகளின் ஆவணங்களில் ஒருசில மென்மையான கோஷங்களைத்தான் நாம் காண்கிறோம்.
ஆகவே தமிழர் அபிலாஷைகளையும் கோஷங்களாக மட்டும் இல்லாமல், கோட்பாடுகளாக உள்வாங்க வேண்டும். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிச கட்சி ஆகிய அமைப்புகள் ஆவன செய்ய வேண்டும்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்