முதலாம் திகதியின் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது - அரசாங்கம் அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சரவைக்கு உறுதிமொழி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அவர், எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
டிசம்பர் இறுதிக்குள், சமையல் எரிவாயு வரிசைகள் அகற்றப்படும். இதனால், எதிர்வரும் முதலாம் திகதி முதல் மக்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்ரோ லங்கா தெரிவித்துள்ளது.
முதலாம் திகதியின் பின்னர் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது - அரசாங்கம் அறிவிப்பு | No Gas Shortage From1 August
எரிபொருள் தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் இன்னல்களுக்கு மத்தியில், அன்றாட சமையல் நடவடிக்கைகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை நடத்துவதற்கும், தேவையான எரிவாயுவை வழங்குவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசாங்கத்தின் பெரும் செலவீனமாக இருப்பதன் காரணமாக எரிபொருள் தீவிர பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ம் ஆண்டில் எரிபொருள் கொள்வனவுகளுக்கு 6.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
இலங்கை போன்ற சிறிய பொருளாதாரம் கொண்டுள்ள நாட்டிற்கு இவ்வாறான அதிகரிப்பை தாங்கிக் கொள்வது கடினம் என அவர் மேலும் தெரிவித்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்