எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அபாய நிலை ஏற்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றிரவு டீசல் கப்பலொன்று நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் டீசல் விநியோகம் தொடங்கும்.ஆனால் கூப்பன்களை விநியோகிக்க இராணுவம் இல்லை.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Sri Lanka Fuel Crisis Urgent Requests Army
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ள இராணுவத்தினர்
கடந்த காலங்களில் இராணுவத்தினர் கூப்பன்கனை வழங்கி வந்த நிலையில்,தற்போது எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர் கடமைகளில் இல்லை.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,கடந்த நாட்களை போல இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடாவிட்டால் எரிவாயு நிலையங்களில் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மேற்கு மாகாணத்தில் 320 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 180 வண்டிக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என மாநகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Sri Lanka Fuel Crisis Urgent Requests Army
நாட்டை வந்தடையும் எரிபொருள் கப்பல்
மேலும்,எரிபொருளை ஏற்றிக்கொண்டு மேலும் மூன்று கப்பல்கள் நாளை மறுதினம் இலங்கையை வந்தடைய உள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தலா 40,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்களும், 35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பலும் வருகின்றன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை | Sri Lanka Fuel Crisis Urgent Requests Army
இம்மாதம் 21ஆம் திகதி 31,500 மெற்றிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு கப்பலொன்றும், 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலொன்றும் இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடையும் எரிபொருளை எரிபொருள் நிலையங்களில் அமைதியான முறையில் வழங்க இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்