வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்! புலிகள் உங்களை விட சிறந்தவர்கள் - காலிமுகத்திடல் போராட்டகாரர்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் எனவும் புலிகள் அமைப்பை மதிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை கைப்பற்றி பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டகாரர்கள், இராணுவத்தினரை பார்த்து இதனை கூறியுள்ளனர்.
போர் குற்றங்களுக்கு இன்னும் பதில் இல்லை
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் இல்லை எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் ஊடாக இராணுவத்தின் போர் குற்றம் உறுதியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சரத் பொன்சேகா கட்டளை வழங்கிய இராணுவத்தினரே சரியாக பணியாற்றினர். நீங்கள்(படையினர்) தாக்குதல் நடத்துவதை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது.
நீங்கள் செய்த போர் குற்றங்களுக்கு இதுவரை பதில் இல்லை. நீங்கள் செய்யும் வேலைகளால் அந்த குற்றச்சாட்டுக்கள் உறுதியாகும்.
நீங்கள் இராணு உடையில் சென்றால் காரி துப்புவார்கள். உங்களை விட புலிகள் சிறந்தவர்கள். பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
நீங்கள் இப்படி செயற்பட்டதன் காரணமாகவே புலிகள் எங்களையும் தாக்கினர், கோபம் கொண்டனர் எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் ஒருவர் இராணுவத்தினரை பார்த்து கூறியுள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்