முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 702 சிட்னியில் காணாமல்போன இந்திய இளைஞன் சடலமாக மீட்பு!

சிட்னியில் காணாமல்போன இந்திய இளைஞன் சடலமாக மீட்பு!
சிட்னியில் கடந்த நான்கு நாட்களாக காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராகுல் சிங் என்ற இந்தியப் பின்னணிகொண்ட 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ம் திகதி காலை 6 மணியளவில் Alchornea Crescent, Mount Annan-இல் அவதானிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து அவரைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது அன்றையதினம் காலை 7 மணியளவில் ராகுல் சிங், Mount Annan தாவரவியல் பூங்காவிற்குள் சென்றுகொண்டிருப்பது cctv கமராவில் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து குறித்த பகுதியில் தீவிரதேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து, நேற்று மதியம் 1.40 மணியளவில் குறித்த இளைஞனின் சடலம் Mount Annan தாவரவியல் பூங்காவிலுள்ள நீரணையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்படவில்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை குறித்த இளைஞர் bipolar disorder எனும் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?