முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 747 ரணிலின் செயல்பாட்டை ஆதரிக்கும் அமைச்சர்.

பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர்
இலங்கையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார். பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction மக்கள் ஆணைமூலம் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பங்கரமான நிலைமையாகும். மேலும், போராட்டத்துக்குள் பயங்கரவாதிகளும் நுழைந்திருக்கின்றனர். உண்மையான போராட்டக்கார்களின் தலைவர்களுடன் நான் கலந்துரையாடி இருக்கின்றேன். அவர்களுடன் இணக்கப்படாட்டுக்கு நாங்கள் வந்தோம். அவர்களின் கோரிக்கையாக இருந்தது முன்னாள் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்பதாகும். அதுவரைக்கும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது. பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction போராட்டம் மூலம் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பதவி விலகியது அதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டும். அதற்கு ஏற்றவகையில் அவர்களின் போராட்டம் மாற்றமடையவேண்டும். அதற்கு அப்பாலும் அவர்கள் யாரும் வேண்டாம் என்றால் இதனை பொறுப்பேற்பது யார். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் யாரையாவது ஜனாதிபதியாக பெயரிடவேண்டும். இவ்வாறு இல்லாமல் போராட்டத்தை மேற்கொள்வதாக இருந்தால் அது நாட்டில் ஸ்திரத்தன்மையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை சீரழிக்கும் செயலாகும். இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டன. பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தியது. 400 பஸ்கள் எரிக்கப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகளை அழித்தார்கள். 40க்கும் மேற்பட்ட தேயிலை தொழிற்சாலைகளுக்கு தீ வைத்தார்கள். 12 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவம் மற்றும் பொலிஸாரை கொலை செய்தார்கள். இவ்வாறாதொரு நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லவே முயற்சிப்பதாக எமக்கு விளங்குகிறது. இதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன், போராட்டத்தில் மறைந்து பாரிய குற்றச்செயல்களை மேற்கொண்டவர்களையே கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. பிரபாகரனைவிட இது பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது! நீதி அமைச்சர் | Prabhakaran Terrorism In South Massive Destruction இதனை யாரும் எதிர்க்கவில்லை. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எவருக்கும் எந்தவித நெருக்கடியையோ அவர்களை கைதுசெய்யவோ கூடாது என பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றோம். அவர்கள் குற்றச்செயல்களை அனுமதிப்பதில்லை. அதேபோன்று இந்த போராட்டத்தின் மூலம் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவே அவசரகால சட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் மக்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை.- என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?