முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 742 இரட்டை வேடத்தால் விக்கியை வெறுத்த சாணக்கி

கதைப்பதற்கு விக்கினேஸ்வரனிற்கு தகுதி இல்லை! சாணக்கியன் போர்க் கொடி
ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல என இரா.சாணக்கியன் தெரிவித்தார். இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வு நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து சனிக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையாவது ஆதரிப்பதா அல்லது நடு நிலை வகிப்பதா என்பது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை. கதைப்பதற்கு விக்கினேஸ்வரனிற்கு தகுதி இல்லை! சாணக்கியன் போர்க் கொடி | Tna To Decide After Nominations Are Handed Over தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் 19 ஆம் திகதி சந்திக்கவுள்ளதால் அன்றைய தினமே இறுதி முடிவெடுக்கப்படும் எனறார். ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நடு நிலை வகிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் .எம்.பியுமான விக்னேஸ்வரன் கூறியுள்ளாரே என கேட்டதற்கு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் எம்.பி. தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்தவரல்ல. அவர் எமது கட்சியிலிருந்து எப்போதோ வெளியேறிவிட்டார். எனவே எமது கட்சியின் நிலைப்பாட்டை அவர் எப்படிக் கூற முடியும்? அவ்வாறான எந்த தீர்மானத்தையும் நாங்கள் விக்னேஸ்வரன் எம்,பின் கட்சியுடன் மேற்கொள்ளவில்லை. நாட்டை மீண்டும் ஸ்திர நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால் போராட்டக்காரர்களும் விரும்பக்கூடிய ஜனாதிபதி ,பிரதமரைக் கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அதனைவிடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஜனாதிபதி,பிரதமரை தெரிவு செய்தால் நாடு ஒருபோதுமே ஸ்திர நிலையை அடைய முடியாது. ஏனெனில் கோத்தா ,ரணில் வீட்டுக்கு போக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை எனவும் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?