முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 749 முழுஅளவில் தயார் திடுக்கிடும் தகவல்.

தாக்குதல் என்பதற்கு அப்பால் எங்களோடு மோதவர வேண்டாம் என்பதே இதன் கருத்து. எங்களையும் வாழவிடுங்கள்.
அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த முழுஅளவில் தயார் ; வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு-! ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இந்நிலையில், அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது. இந்த சூழலில், கொரிய போரின் 69வது ஆண்டு தின நிகழ்வை நினைவுகூரும் வகையில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, அமெரிக்காவுடனான மோதல் போக்கு அணு ஆயுத ஆபத்துகளை உருவாக்கி விட்டது. சுய பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை வடகொரியா எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டது. எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள எங்களுடைய ஆயுத படைகள் முழு அளவில் தயாராக உள்ளன. இதேபோன்று, எங்கள் மீது நடத்தப்படும் அணு ஆயுத போரை தடுக்கும் வகையில், நாங்கள் நம்பிக்கையுடன், துல்லியமுடன் மற்றும் சரியான முறையில் பதிலடி கொடுக்க முழு அளவில் தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார். அமெரிக்காவுடனான எந்த ஒரு ராணுவ மோதலையும் எதிர்கொள்ள, வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என நான் மீண்டும் தெளிவுப்படுத்தி கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். போர் நடந்து 70 ஆண்டுகள் கழித்தும், தென்கொரியாவுடன் சேர்ந்து கொண்டு, வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் வடகொரியாவை அச்சுறுத்த முயற்சிக்கிறது என அவர் கூறியுள்ளார். ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என வடகொரியா நீண்டகாலம் ஆகவே தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இதனாலேயே, தனது நாடு மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கத்திற்கு ஏதுவாக, அதற்கு மாற்றாக அணு ஆயுத திட்டங்களை நிறுத்துவது பற்றிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிக்கான நம்பிக்கைகளை அது குலைக்கிறது என அந்நாடு கூறி வருகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,