முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 766 நடத்தையில் சந்தேகம் உயிர் கொலை

பாரதக்கதையில் இருந்து பெண்கள் தவறு விடுவது உன்மைதான் ஆனால் அவளை கொலை செய்வதை விட தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பவனே உன்மையான ஆண் மகனாகக் கருதப்படுவான்.
நடத்தையில் சந்தேகம் – ஷூ லேசால் மனைவி கழுத்தை நெரித்து கொலை திருமணமாகி 17 ஆண்டுகள் கணவன்- மனைவி ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில் தற்போது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார் கணவர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.r அம் மாவட்டத்தில் நவல்பூர் தியாகி மாணிக்கம் பகுதியில் வசித்து வருபவர் சுலைமான்(வயது40) இவரது மனைவி மும்தாஜ்(வயது 39), இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகியிருக்கும் இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுலைமான் அதே பகுதியில் இருக்கும் தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இத்தனை வருட காலம் கணவன் -மனைவி ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மனைவி மும்தாஜ் நடத்தையில் சுலைமானுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது . இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நேற்று காலையில் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார் சுலைமான். அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் கடும் ஆத்திரமடைந்த சுலைமான் தனது ஷூ லேசால் மனைவி மும்தாஜ் கழுத்தை இறக்கி இருக்கிறார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். மனைவி உயிரிழந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார். இதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்து மும்தாஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். மனைவியை கொன்ற சுலைமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?