நாட்டில் உண்மைகள் மற்றும் சட்டப் பின்னணியை ஆராயாமல் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது குறித்த அறிக்கைகளை வெளியிடுவது, பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்று சபாநாயகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் கொந்தளிப்பான பொது உணர்வைக் கருத்தில் கொண்டு, அறிக்கைகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda yapa Abeywardena) அனைத்து ஊடக நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! | Speaker Mahinda Yappa Issued A Strong Warning
இந்த செயல்முறை அல்லது வேறு ஏதேனும் நாடாளுமன்ற விவகாரம் தொடர்பில் தேவையான எந்த விளக்கங்களையும் வழங்க நாடாளுமன்ற அலுவலகம் தயாராக உள்ளது.
எனவே அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது நாட்டின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து குடிமக்களும் அமைப்புகளும் உதவுமாறு சபாநாயகர் அலுவலகம் கோரியுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! | Speaker Mahinda Yappa Issued A Strong Warning
இதனையடுத்து அதன் நம்பகத்தன்மையை பரிசீலித்த பின்னர் ஜூலை 15ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகலை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு இடம்பெற்றதன் பின்னர், மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, அதன் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 2022 ஜூலை 16ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதியின் பதவி விலகல் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! | Speaker Mahinda Yappa Issued A Strong Warning
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட நாளில் இருந்து 48 மணித்தியாலங்களுக்கு முந்தாமலும், 7 நாட்களுக்கு பிந்தாமலும் வேட்பு மனுக்களுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இதன்படியே அந்த திகதி 2022, ஜூலை 19ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த திகதியில் வேட்பு மனுக்களை பெற்ற பின்னர், 48 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதன்படியே ஜனாதிபதி தெரிவுத் தேர்தலுக்கான திகதி 2022 ஜூலை 20 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிறசெய்திகள்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்