முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 733 உகாண்டாவில் தங்களின் பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளார்களா?

காணாமல் போன தமிழர்கள் உகாண்டாவில் என சந்தேகம்
அரச படையினரிடம் கையளிக்கப்பட்டு அவர்களால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானது என நம்பப்படும் தொழிற்சாலைகளில் அடிமை பணியை செய்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். “ராஜபக்ச குடும்பத்துக்குச் சொந்தமான உகாண்டாவில் உள்ள 11 தொழிற்சாலைகளில் எங்கள் பிள்ளைகள் ஊதியம் இன்றி தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். கையளித்து காணாமல் போன எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என சொல்ல முடியாதவர்கள் எமது பிள்ளைகளை கூலித்தொழிலாளிகளாக்கி வைத்திருக்கலாம். அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் வேலுப்பிள்ளை கணநாதன் என்ற தமிழர் இருக்கிறார்,'' என வடக்கு கிழக்கு மாகாண பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் யோகராசா கலைரஞ்சனி தெரிவிக்கின்றார். இந்த வருட ஆரம்பத்தில், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்பதிக்கு புனித யாத்திரை செல்வதற்காக உகண்டாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபரும், கென்னியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருமான வேலுபிள்ளை கணநாதன் தனியார் ஜெட் விமானத்தை வழங்கியதாக நம்பப்படுகிறது. ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளாக வாழ்கிறார்களா காணாமல் போன தமிழர்கள் உகாண்டாவில் என சந்தேகம் | Suspected The Missing Tamils May Be In Uganda கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட கலைரஞ்சனி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் சமூகம் ஒன்று திரண்டு தமது பிள்ளைகள் உகாண்டாவில் இருக்கிறார்களா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்வதற்கு ஆதரவு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். “நிச்சயமாக எங்கள் பிள்ளைகள் கொல்லப்படவில்லை. அவர்கள் அனைவரும் இந்த ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகளாக வாழ்கிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது காணாமல் போன தமிழர்கள் உகாண்டாவில் என சந்தேகம் | Suspected The Missing Tamils May Be In Uganda 13 ஆண்டுகளாக எங்கள் உறவினரை தேடி வருகிறோம். எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் சொல்லும் என நான் நம்பவில்லை. இந்த ஆட்சி மாற்றம் எங்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்யாது.” இலங்கையை அவதானித்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியையும் பெற்றுத்தருமாறு அவர் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துகிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்திலும் அரசியல் தீர்வுக்கான போராட்டத்திலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தேவையான ஆதரவையும் தலைமையையும் வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அநாதைகளாக வீதியில் அலையும் ராஜபக்ச குடும்பம் காணாமல் போன தமிழர்கள் உகாண்டாவில் என சந்தேகம் | Suspected The Missing Tamils May Be In Uganda “நாட்டில் இருந்து துரத்தப்பட்ட ராஜபக்ச குடும்பம் அநாதைகளாக வீதியில் அலையும் இந்த தருணத்தில் கொலையாளியை கைது செய்ய சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதி கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.” சிங்கப்பூரில் உள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய வலியுறுத்தி மலேசியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) முன்னாள் அதிபருக்கு எதிராக சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறுிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?