முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 738 இந்தியாவில் இயற்கைகை மீறிய பெண்கள் திகில் சம்பவம்.

மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த ஆசிரியர்
தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாணவியின் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்திருக்கிறார் ஆசிரியர். ஒடிசா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம் . ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டம். அம் மாவட்டத்தில் பரின்கியா என்கிற பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தயானதிட்சனா என்பவரிடம் டியூஷன் படித்து வந்திருக்கிறார். டியூஷன் படிக்க வந்த அந்த மாணவியிடம் தொடர்ந்து சில்மிஷங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் அந்த ஆசிரியர். இதனால் பயந்து போன அந்த மாணவி, அந்த டியூஷனுக்கு போவதை நிறுத்தி இருக்கிறார். இந்த நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள கடையில் மாணவி பென்சில் வாங்க சென்றிருக்கிறார். அப்போது தயான திட்சினா மாணவியை வழி மறித்திருக்கிறார். அப்பொழுதும் மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு மீண்டும் வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு அந்த மாணவி மறுக்கவும் , அங்கே மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து மாணவியின் தலையில் ஊற்றி இருக்கிறார் . இதில் அந்த மாணவி உடல் முழுவதும் எண்ணெய் பரவி அதிர்ச்சியில் உறைந்து நின்றிருக்கிறார். திடீரென்று அந்த ஆசிரியர் தீ வைக்கவும், மாணவி அலறி துடித்து எரிந்து உயிரிழந்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தயானதிட்சனாவை கைது செய்து செயல் அளித்திருக்கிறார்கள் . பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஒரு மாணவியை மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் தீவைத்து எரித்துக்கொன்ற டியூசன் ஆசிரியரின் செயல் பரின்கிரியா பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?