முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 721 கொழும்பில் தலை தூக்கும் ஆயுத வன்முறை.

பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு
முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டு வீச முயன்ற சந்தேகநபர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை - மனஹேன, தலகஸ்பே பிரதேசத்தில் முறைப்பாடொன்றை விசாரிக்கச் சென்ற இரண்டு பொலிஸார் மீது நேற்று மாலை கத்தியால் வெட்டி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதன்போது தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிளை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: பொலிஸார் துப்பாக்கிச் சூடு பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழப்பு | Suspect Killed In Shootout By Police Officers Sl மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து, பிட்டிகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அதன்போது, சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். சந்தேகநபரைத் தடுக்க முயன்றபோது, தன்னிடமிருந்த கைக்குண்டு மூலம் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க அவர் முயற்சி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் துப்பாக்கிச்சூடு அதன்போது பொலிஸ் அதிகாரிகள் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேகநபர் காயமடைந்துள்ளார். காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் இன்று காலை உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?