தீவிரமடையவுள்ள ரணிலுக்கு எதிரான போராட்டம் - பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு
இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை
பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வற்புறுத்துவதற்கு எதிர்வரும் இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தீவிரமடையவுள்ள ரணிலுக்கு எதிரான போராட்டம் - பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு | Take Serious
எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
இன்று முதல் அருகில் உள்ள நகரங்களில் போராட்டம் நடத்த வருமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றியுடன் முடிக்க முடியும்
நாடே போராட்டக் களமாக மாறியிருப்பதால் முன்னாள் அதிபரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
தீவிரமடையவுள்ள ரணிலுக்கு எதிரான போராட்டம் - பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு | Take Serious
பதில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இந்தப் போராட்டத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்