முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 741 நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன

நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. யோகார்ட், பழைய சாதம், ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை எடுத்து வருவது நல்லது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. டயாபெட்டீஸ் நோயாளிகள் சில உணவுகளை உண்பது அவர்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Can Diabetics Eat Fermented Foods நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும்? புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஊறுகாய், வினிகர் நிறைந்த சாஸ்கள், கொம்புச்சா, கேஃபிர் மற்றும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய இட்லி மற்றும் தோசை போன்றவை ஆரோக்கியத்திற்கு நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Can Diabetics Eat Fermented Foods நீரிழிவு நோயாளிகளில் இரத்த சர்க்கரையை குறைக்க புளித்த உணவுகள் எவ்வாறு உதவும் என்பதற்கு பல கூற்றுக்கள் உள்ளன. இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில் புளித்த உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை அறிவோம்.
புளித்த உணவுகள் எந்த வகையில் உதவுகிறது? புளித்த உணவுகள் புரோபயாடிக்குகள் நிறைந்தவை மற்றும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன. இது கார்போஹைட்ரேட்டுகளை சிறப்பாக உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. மேலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கிறது. இந்த புரோபயாடிக் நிறைந்த உணவுகளை உட்கொள்வது என்பது உங்கள் ஒட்டுமொத்த குடல் தாவரங்களுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியா மற்றும் என்சைம்களைச் சேர்ப்பதாகும். நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Can Diabetics Eat Fermented Foods மேலும் இது நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கொழுப்பு மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக கொழுப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. புளித்த உணவுகளை உட்கொள்வது சீரம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இருதய நோய்களை ஏற்படுத்தும் என்று அறியப்படும் உடலில் வசோ கன்ஸ்டிரிக்டர்களின் (இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் மருந்துகள்) செயல்பாட்டை தடுக்கிறது. தயிர் சாப்பிடலாமா? தயிர் போன்ற புரோபயாடிக்குகள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், இன்சுலின் உணர்திறனைத் தூண்டவும் உதவுகின்றன. இது டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். உடல் எடை அதிகரித்தாலே நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு ஏற ஆரம்பித்து விடும். நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Can Diabetics Eat Fermented Foods எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பது என்பது நல்ல விஷயம். உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். மேலும் குறைந்த கார்ப் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புளித்த உணவுகளை எடுத்துக் கொள்வது உங்க உடல் எடையை குறைக்க பெரிதும் பயன்படுகிறது. உங்கள் குடல் பாக்டீரியாவை மேம்படுத்த ஒரு நாளைக்கு ஒரு முறை புரோபயாடிக்குகள் சாஸ் போன்ற புளித்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளலாம். இது உங்கள் எடை மற்றும் இரத்த சர்க்கரையை சீராக்க உதவும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள் புரோபயாடிக் உணவுகளில் நொதித்தல் செயல்முறை நடைபெறுகிறது. இதை எடுத்துக் கொள்ளும் போது புரதத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி, சி மற்றும் தாதுக்களின் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் புளித்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? | Can Diabetics Eat Fermented Foods இது நார்ச்சத்து நிறைந்ததாகவும், எளிதில் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயத்தை குறைக்கிறது. நொதித்தல் என்பது உணவைப் பாதுகாக்கும் மிகப் பழமையான முறைகளில் ஒன்றாகும். இதைத் தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். யோகார்ட் போன்ற நொதித்தல் உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பல வகைகளில் உதவி செய்கிறது. எனவே புளித்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொண்டு இரத்த சர்க்கரை நோயை விரட்டுவோம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?