முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 590 அறிவற்றவர்களின் வன்முறை

கும்பகோணத்தில் காதல் தம்பதியை வெட்டிக் கொன்ற உறவினர்கள் - திருமணமான ஐந்து நாளில் சோகம்
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றஉம் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி செய்கின்றனர். மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையில் மலர்ந்த காதல் விளம்பரம் இதற்கிடையே, சரண்யாவின் தாயார் தேன்மொழி உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த (செங்குந்த முதலியார் வகுப்பை சேர்ந்த) மோகன் (26) என்பவரின் தாயாரும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் சரண்யாவுக்கும் மோகனுக்கும் காதல் அரும்பியுள்ளது. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர் மர்ம சாவு - என்ன நடந்தது? "இன்னும் எத்தனை படுகொலைகள் நடக்க வேண்டும்?" – இயக்குநர் பா. ரஞ்சித் இருவரது தாயாரும் சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக காதல் தொடர்புகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர். இந்த ஜோடி இன்று காலை சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருந்தனர். அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாளிட்டுள்ளனர். பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணை இதையடுத்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று அந்த கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர்கள் அசோகன், வெற்றிவேந்தன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, குடும்ப பிரச்சனை காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளது. படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார். இந்த நிலையில், காதல் தம்பதியை படுகொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?