ஏமாற்றிவிட்டார் கோட்டாபய -தனி வழியில் செல்கிறோம் -வெளிவந்த பகிரங்க அறிவிப்பு
ஏமாற்றிவிட்டார் கோட்டாபய
ஏமாற்றிவிட்டார் கோட்டாபய -தனி வழியில் செல்கிறோம் -வெளிவந்த பகிரங்க அறிவிப்பு
வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றி விட்டதாக அந்த அமைப்பின் தலைவர்,முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் பாதை
அரசியல் ரீதியாக விரக்தியடைந்துள்ள தானும் மற்றும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் பாதையில் பிரவேசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏமாற்றிவிட்டார் கோட்டாபய -தனி வழியில் செல்கிறோம் -வெளிவந்த பகிரங்க அறிவிப்பு
இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
வியத்மக அமைப்பு ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவதற்கு கடுமையாக உழைத்தது குறிப்பிடத்தக்கது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்