முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 643 கர்ப்பிணிக்கு க் கூட மதிப்பு இல்லாதே பரிதாபம்.

கிளிநொச்சியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீதியில் நேர்ந்த துயரம்
கிளிநொச்சியில் இன்றைய தினம் அரச உத்தியோகத்தர்களுக்கு பெற்றோல் வழங்குவதாக கிடைப்பெற்ற தகவலுக்கு அமைய கிளிநொச்சி மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியை ஒருவர் கொளுத்தும் கடும் வெயிலுக்குள் வரிசையில் நின்றார். அவரை அவதானித்த போது அவரால் அந்த வரிசையில் நிற்க முடியாத நிலையில் நிற்பதனை காணமுடிந்தது. அவரது கணவரும் அருகில் இருந்தார். கிளிநொச்சியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீதியில் நேர்ந்த துயரம் மனைவியை விட்டுவிட்டு நீங்கள் மாத்திரம் வந்திருக்கலாமே என்றோம் அவரவருக்குதான் பெற்றோல் அடிப்பதாக தெரிவித்தனர். என்றார். உண்மையும் அதுவாகதான் இருந்தது. ஏற்கனவே வைத்தியசாலையில் மனைவி அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது தொழில் அடையாள அட்டையுடன் கணவன் வந்த போது திருப்பிய அனுப்பியவர்கள் கிளினிக் காட்டை கொண்டுவருமாறு கூறியிருந்தனர். அந்த இளைஞனும் வைத்தியசாலைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்றதனையும் அவதானித்தோம். கிளிநொச்சியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீதியில் நேர்ந்த துயரம் இதன் போது நாம் அந்த நிறைமாத கர்ப்பிணி ஆசிரியை வரிசையில் நிற்க விடாது முன்னால் அனுப்புவதற்கு பெற்றோல் செட வாசலில் நின்றவர்களுடன் உரையாடி அனுப்பிவிட அங்கு நின்றவர்கள் குறித்த ஆசிரியை மிக மோசமாக நடாத்தி, வாரத்தைகளால் புண்படுத்தி திருப்பி அனுப்பிவிட்டார்கள். குறித்த ஆசிரியை மீண்டும் நாம் இருந்த வரிசைக்கு வந்த போது அவரிடம் ஏன் என விசாரித்தோம், அப்போது அவர் சொன்னார் அங்கு நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல அவர்களிடம் மிக கேவலமான வார்த்தைகளை கேட்டுக்கொண்டு சென்றுதான் பெற்றோல் அடிக்க வேண்டும் என்ற நிலை வேண்டாம் இரவானாலும் பரவாயில்லை வரிசையில் நின்றே அடித்து விட்டுச் செல்வோம் எனச் சொல்லிவிட்டு மூச்சு வாங்கினார். கிளிநொச்சியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீதியில் நேர்ந்த துயரம் பின்னர் சில மணித்தியாலயங்களின் பின்னர் எமது வரிசையில் நின்ற வேறு சிலர் ஆசிரியையின் நிலைமையினை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து அவரை பெற்றோல் அடிப்பதற்கு வழிவகுத்தனர். அதுவும் வசைப்பாடல்களுக்கு மத்தியில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்று மாபியாக்களின் கைகளில். அவர்கள்தான் அதனை கட்டுப்படுத்துகிறார்கள். கறுப்புச் சந்தையில் அதிக விலைகளில் விற்பனை செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலைத்தின் பணியாளர்களுடன் இணைந்து மிக மோசமாக நடந்துகொள்கின்றார்கள். கிளிநொச்சியில் நிறைமாத கர்ப்பிணிக்கு வீதியில் நேர்ந்த துயரம் கர்ப்பிணித் தாய்மார்கள், தவிர்க்க முடியாது குழந்தைகளுடன் வருகின்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள், என எவரையும் அவர்கள் மதிப்பதாக தெரியவில்லை. எனவே எரிபொருள் விநியோகத்தில் முறையான திட்டமிடல்கள், பொறிமுறைகள் மேற்கொள்ளாது விடத்து. நிலைமைகள் மேலும் மோசமடையும் என Murukaiya Thamilselvan என்ற ஊடகவியாளர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?