மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு
உக்ரைன் - ரஷ்யா போர் 117 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில்,மூன்றாம் உலக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு இராணுவம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து இராணுவ வீரர்களை உடனடியாக போருக்கு தயாராகுமாறு இங்கிலாந்து இராணுவ அதிகாரி ஜெனரல் சர் பேட்ரிக் சான்டர்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மூன்றாம் உலக போருக்கு தயாராகுங்கள்! இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு உத்தரவு
ஏற்கனவே மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்