முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 638 செய் அல்லது செத்து மடி ஒரு துளியும் கொழ்கை மாறாதே தமிழர்கள் .

பாரிசில், உணர்வுபூர்வமாக நடைபெற்ற "எழுக தமிழா" நிகழ்வு (படங்கள்)
"எழுக தமிழா" எழுச்சி நிகழ்வு இலங்கைஅரசினால், காலாகாலமாக தமிழ்மக்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பிற்கு நீதிகேட்டும்,பறிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இறையாண்மைக்கான உரிமையை பெற்றுத்தர ஆவன செய்யக்கோரியும், திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நமது தேசிய அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டியும், பிரான்ஸ் வாழ் தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைவில் முன்னெடுக்கப்பட்ட "எழுக தமிழா" எழுச்சி நிகழ்வானது 22.06.2022, பாரிசின் République சுதந்திர சதுக்கத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை இளையோர் தலைமையேற்று நடத்தியிருந்தமை சிறப்பான விடயமாகும். இந்நிகழ்வில் பிரான்ஸ் நகரசபைகளின் முக்கிய உறுப்பினர்கள், இனவிடுதலையை நேசிக்கும் மக்கள்,உணர்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 22.06.2022 மாலை மூன்று மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி.சுகுர்ணா ஸ்ரீகணேஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தேசியக்கொடியேற்றல் நிகழ்வு. இதன்போது, பிரெஞ்சு தேசியக்கொடியினை Vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr. Albertino Ramaël அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து எமது தேசியக்கொடிக்கீதம் காற்றலையில் ஒலிக்க, தமிழீழ தேசியக் கொடியினை திருமதி ஈழநதி அவர்கள் ஏற்றிவைத்தார். பட்டொளி வீசிப் பறந்த தேசியக்கொடியின் கீழ் மக்கள் பரவசமாய் நின்றிருந்தனர். அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வின் விளக்கவுரையினை, இளையதலைமுறையின் ஏற்பாட்டாளர் குலராஜ் நிகழ்த்த,அதனைத்தொடர்ந்து மூத்த கலைஞர்களின் பறையிசைப்பாடல் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது. சிறப்புரைகள்
பின்னர் உரைகள் இடம்பெற்றன. ville juif நகரசபை உறுப்பினர் Mr.Guillqme de souch, vitry sur seine நகரசபை உதவி நகரபிதா Mr.Albertino Ramaël, Bondy நகரசபை உதவி நகரபிதா திருமதி Katie, Seine saint Denis மாவட்டசபை உறுப்பினர் Oldhynn PIERRE, Bondy சபையின் உதவி நகர பிதா திருமதிCathy JANKOWSKI. Bondy மாநகர சபை உறுப்பினர் பிறேமி பிரபாகரன் போன்றோர் உரையாற்றியதுடன், பிரெஞ்சு மொழியிலான உரையினை, செல்வி. அம்மு ரஞ்சித்குமார், செல்வி.இலக்கியா எட்வேர்ட் லூயிஸ், ஆகியோரும், சிறப்புரைகளினை, தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பொன்.நாயகன், la Courneuve நகரசபை உறுப்பினர் திருமதி. சுகுர்ணா ஸ்ரீகணேஸ், தமிழரசன், சுதன்ராஜ், Noisy le sec நகரசபை உறுப்பினர் El hadj Mahmoudba ஆகியோரும் நிகழ்த்தினர். நிகழ்வில் கவிஞர் வன்னியூர் குரூஸ் அவர்களின் உணர்வுக் கவிதையும், மூத்த கலைஞர்களான தயாநிதி, மயிலையூர் இந்திரன், ஆகியோரின் சிறந்த வெளிப்படுத்தலில் "நாயைக்காணவில்லை" எனும் நாடகமும் நடைபெற்றன. கூடிநின்ற மக்கள்,உணர்வாளர்களின் மனமுருக சிறப்பாக அமைந்திருந்தது அந்நாடகம்.
நமது தமிழினத்தின் மேல் மேற்கொள்ளப்பட்டது திட்டமிடப்பட்ட இனவழிப்பு எனவும் ,அதற்கான நீதி கிடைக்க பிரான்ஸ் அரசாங்கம் எமக்கு உதவி புரிய வேண்டுமெனவும், மூதாதையர் வழிவந்த எமது தேசிய அடையாளங்களை அழியவிடாது பாதுகாத்து பயன்படுத்துவதற்கும் , போரில் வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளின் நிலையையும் விடுதலையையும் பெற்றுத்தருவதற்கும் மனிதாபிமான பிரான்ஸ் அரசு தமக்குஉதவி புரியவேண்டுமெனவும் "எழுக தமிழா" நிகழ்வில் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நன்றியுரையினை குணா அவர்கள் வழங்க தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு 'நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும்' எனும் பாடலுடன் நிகழ்வு எவ்வித இடையூறுகளுமின்றி அமைதியாக நிறைவுபெற்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?