முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 629 பெண்ணின் துயரமான முடிவு -

பல்வேறு கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை பெண்ணின் துயரமான முடிவு - தனித்து விடப்பட்ட பச்சிளம் மகன்
இலங்கை பெண்ணின் துயர முடிவு புது வாழ்வு,புது உலகம் என கணவனுடன் கனடா வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் தாலி கட்டிய கணவனால் துன்புறுத்தப்பட்ட நிலையில் , பெண்களை வெறுக்கும் ஒருவரால் பரிதாபகரமாக உயிரிழக்க அவரது பச்சிளம் பாலகன் அநாதரவாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது தான் துயரம். அவரின் துயர வாழ்வு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2010ஆம் ஆண்டு, பெற்றோரால் ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தைத் தொடர்ந்து, கணவருடன் கனடா வந்தடைந்தார் ரேணுகா அமரசிங்க (45). ஆனால், கனவுகளுடன் வந்த வாழ்க்கை மலர்ப் படுக்கையாக அவருக்கு இருக்கவில்லை. விரைவில் காவல் நிலையத்தை நாடிச் செல்லவேண்டிய ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ரேணுகாவை, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கணவர் துன்புறுத்துவதாக அவர் புகாரளிக்க, அவரது கணவரை கைது செய்துள்ளார் லாரா (Laura Middleton) என்ற பெண் காவல்துறை அதிகாரி. அப்போதிருந்தே, தனிமையில் விடப்பட்ட ரேணுகாவுக்கு பல உதவிகள் செய்துள்ளார் லாரா. பல்வேறு கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை பெண்ணின் துயரமான முடிவு - தனித்து விடப்பட்ட பச்சிளம் மகன் ரேணுகா தன் கணவரை விவாகரத்து செய்ய, 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரேணுகாவின் மகன் Diyon பிறந்திருக்கிறான். தனி ஆளாக மகனையும் வளர்த்தபடி, தானும் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார் ரேணுகா. பின்னர் Toronto District School Boardஇல் ஒரு வேலையும் கிடைத்தது. ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில், தனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது உதவிய காவல் நிலையத்துக்கு தன் மகனுடன் சென்று, தனக்கு உதவிய காவல்துறையினருக்கு நன்றி கூறுவது ரேணுகாவின் வழக்கமாம். எமனாக வந்த மற்றொரு ஆண் இந்தநிலையில்,ரேணுகாவின் வாழ்வில் எமனாக வந்திருக்கிறார் மற்றொரு ஆண். தனக்குப் பழக பெண் கிடைக்காத வெறுப்பில், வான் ஒன்றைக் கொண்டு பாதசாரிகள் மீது மோதியிருக்கிறார் அலெக் மின்னேசியன் என்னும் அந்த நபர். பல்வேறு கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை பெண்ணின் துயரமான முடிவு - தனித்து விடப்பட்ட பச்சிளம் மகன் அந்த வான் மோதியதில் 10 பேர் ஸ்தலத்தில் கொல்லப்பட, 16 பேர் படுகாயமடைந்தார்கள். அந்த விபத்தில் பலியான பெண்களில் ரேணுகாவும் ஒருவர். தன் மகனை வளர்த்து ஆளாக்கவேண்டும் என்ற கனவில் தனி ஆளாகப் போராடிய ரேணுகா, அவனைத் தனியே விட்டு விட்டுப் போய்விட்டார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?