முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 600 உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா
உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் உக்ரைனில் இரண்டு பிரித்தானியர்கள் போரில் ஈடுபட்டதாகத் தெரிவித்து ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு அமெரிக்கர்களும் யுத்த களத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோரே உக்ரைனில் மோலின்போது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல் அமெரிக்கப் படைவீரர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா போரில் சிறைபிடிப்பு கடந்த வியாழன் அன்று கார்கிவ் அருகே உள்ள இஸ்பிட்ஸ்கே கிராமத்தில் நடந்த ஒரு போரில் குறித்த இருவரும் சிறைபிடிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அவர்களின் நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். போரின் போது இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார், எனினும், பின்னர் மேற்கொண்ட தேடுதலின் போது அவர்களின் உடல்கள் அல்லது அவர்களின் உபகரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்கப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக ரஷ்ய டெலிகிராம் சனலில் ஒரு செய்தி வெளியான போது அவரது சந்தேகம் பின்னர் அதிகரித்ததாக கூறப்படுகின்றது. உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா ஈராக்கில் பணியாற்றியவர் அலபாமாவைச் சேர்ந்த ட்ரூக் அமெரிக்க இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், ஈராக்கில் ஒரு ஸ்டாஃப் சார்ஜெண்டாக பணியாற்றினார். வியட்நாம் பெற்றோருக்குப் பிறந்த ஹுய்ன், அலபாமாவில் வசித்து, கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் படித்து வந்தார். அவர் முன்னர் அமெரிக்க கடற்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். எனினும் போர் அனுபவம் இல்லை என கூறப்படுகின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?