முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 600 உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா
உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கர்கள் உக்ரைனில் இரண்டு பிரித்தானியர்கள் போரில் ஈடுபட்டதாகத் தெரிவித்து ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டு அமெரிக்கர்களும் யுத்த களத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமெரிக்கப் படைவீரர்களான 39 வயதான அலெக்சாண்டர் ட்ரூக் மற்றும் 28 வயதான ஆண்டி ஹுய்ன் ஆகியோரே உக்ரைனில் மோலின்போது சிறைபிடிக்கப்பட்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டால், போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய போர்க் கைதிகளாக மாறிய முதல் அமெரிக்கப் படைவீரர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா போரில் சிறைபிடிப்பு கடந்த வியாழன் அன்று கார்கிவ் அருகே உள்ள இஸ்பிட்ஸ்கே கிராமத்தில் நடந்த ஒரு போரில் குறித்த இருவரும் சிறைபிடிக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அவர்களின் நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். போரின் போது இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறினார், எனினும், பின்னர் மேற்கொண்ட தேடுதலின் போது அவர்களின் உடல்கள் அல்லது அவர்களின் உபகரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கார்கிவ் அருகே இரண்டு அமெரிக்கப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக ரஷ்ய டெலிகிராம் சனலில் ஒரு செய்தி வெளியான போது அவரது சந்தேகம் பின்னர் அதிகரித்ததாக கூறப்படுகின்றது. உக்ரைன் போரில் திடீர் திருப்பம் - இரண்டு அமெரிக்கர்களை சிறை பிடித்தது ரஷ்யா ஈராக்கில் பணியாற்றியவர் அலபாமாவைச் சேர்ந்த ட்ரூக் அமெரிக்க இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், ஈராக்கில் ஒரு ஸ்டாஃப் சார்ஜெண்டாக பணியாற்றினார். வியட்நாம் பெற்றோருக்குப் பிறந்த ஹுய்ன், அலபாமாவில் வசித்து, கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் படித்து வந்தார். அவர் முன்னர் அமெரிக்க கடற்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். எனினும் போர் அனுபவம் இல்லை என கூறப்படுகின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.