முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 581 தொடர்ந்து ஏமாற்றப்படும் இலங்கை அகதிகள்

அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வர முயன்று கிறிஸ்துமஸ் தீவு அருகே இடைமறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், இப்படகு எப்போது அவுஸ்திரேலியா கடல் பகுதிக்குள் நுழைந்தது என்பது தெரியவில்லை. தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் நுழைந்த படகு ஆனால், இவர்களின் படகு இடைமறிக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் படகில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அதே போல், அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் 15 தஞ்சக்கோரிக்கையாளர்களுடன் வந்த மற்றொரு படகும் அவுஸ்திரேலிய எல்லைப்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மொத்தம் இரண்டு படகுகள் இடைமறிக்கப்பட்டு, இலங்கை அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு நாடு கடத்தப்பட்ட அனைவரும் இலங்கையின் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலேயே புதிதாக ஆட்சி வந்துள்ள அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் இருந்து வருகிறது. இந்த கொள்கையின் அடிப்படையிலேயே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?