யாழில் கள்ளக் காதலர்கள் நையப்புடைப்பு!
யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் கள்ளக்காதலர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறை நகரசபை ஈ.பி.டி.பி ஆண், பெண் உறுப்பினர்களான 42 ஆண் நகரநபை உறுப்பினரும், 36 வயதான பெண் நகரசபை உறுப்பினருமே இவ்வாறு ஒப்படைகபப்ட்டுள்ளனர்.
ஆண் பிரதேசசபை உறுப்பினருக்கு க.பொ.த உயர்தரம் கற்கும் மகனும், பெண் பிரதேசசபை உறுப்பினருக்கு தரம் 9 படிக்கும் பிள்ளைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இருவருக்குமிடையில் தகாத தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் இருவரும் மாயமாகியிருந்தனர். இதனையடுத்து இரண்டு குடும்பத்தாரும் அவர்களை தேடியலைந்ததுடன் பருத்தித்துறை பொலிசிலும் சம்பவம் தொடர்பில் முறையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களை பிடித்து பருத்தித்துறை பொலிஸாரிடம் உறவினர்கள் ஒப்படைத்துள்ளனர். அதேசமயம் இருவரும் சேர்ந்த வாழ முடிவெடுத்தே வீடுகளை விட்டு ஓடிச் சென்றதாக தெரிய வருகிறது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்