பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம் - உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
பிரித்தானியாவில் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒரு வீடு இடிந்து சேதமடைந்துள்ளதுடன் மேலும் பல குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்துள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்டாண்டிங்கில் உள்ள டல்விச் சாலையில் நடந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் நேரப்படி 20:30 க்குப் பிறகு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், காயங்களின் எண்ணிக்கை மற்றும் விபத்தின் தீவிரம் தற்போது தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளின்படி, சிவப்பு செங்கல் மாடி வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளதையும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் காட்டுகின்றது.
பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம் - உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
பொது மக்கள் வெளியேற்றம்
இந்நிலையில், டல்விச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிக்னறன. வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
"நாங்கள் தற்போது பர்மிங்காமின் கிங்ஸ்டாண்டிங் பகுதியில் உள்ள டல்விச் சாலையில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவத்தை கையாளுகிறோம் என வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ட்வீட் செய்துள்ளது.
"வெஸ்ட்மிட்ஸ்ஃபயர் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸாருடன் ஏராளமான ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. "பொதுமக்கள் எங்களை வேலை செய்ய அனுமதிக்க அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்