பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம் - உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
பிரித்தானியாவில் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒரு வீடு இடிந்து சேதமடைந்துள்ளதுடன் மேலும் பல குறிப்பிடத்தக்க வகையில் சேதமடைந்துள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிங்ஸ்டாண்டிங்கில் உள்ள டல்விச் சாலையில் நடந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் நேரப்படி 20:30 க்குப் பிறகு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், காயங்களின் எண்ணிக்கை மற்றும் விபத்தின் தீவிரம் தற்போது தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகளின்படி, சிவப்பு செங்கல் மாடி வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் ஏற்பட்டுள்ளதையும், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் காட்டுகின்றது.
பிரித்தானியாவில் பெரும் வெடிப்பு சம்பவம் - உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்
பொது மக்கள் வெளியேற்றம்
இந்நிலையில், டல்விச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிக்னறன. வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
"நாங்கள் தற்போது பர்மிங்காமின் கிங்ஸ்டாண்டிங் பகுதியில் உள்ள டல்விச் சாலையில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவத்தை கையாளுகிறோம் என வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ட்வீட் செய்துள்ளது.
"வெஸ்ட்மிட்ஸ்ஃபயர் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸாருடன் ஏராளமான ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. "பொதுமக்கள் எங்களை வேலை செய்ய அனுமதிக்க அப்பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்