குழப்பிக்கொள்ளவேண்டாம்! இங்கிலாந்து, இலங்கையிடம் வலியுறுத்து!
திசைதிருப்பவேண்டாம்
இலங்கையின் தற்போதைய மிகவும் சவாலான பொருளாதார நிலைமை, நாட்டின் மனித உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளை திசை திருப்பவேண்டாம் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் நாடாளுமன்ற வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துணைச் செயலர் விக்கி ஃபோர்ட், கடந்த செவ்வாயன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் அதேநேரம், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
குழப்பிக்கொள்ளவேண்டாம்! இங்கிலாந்து, இலங்கையிடம் வலியுறுத்து!
உன்னிப்பாக அவதானிப்போம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடினமான மனித உரிமைகள் நிலைமை மற்றும் மோதலுக்குப் பின்னரான பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் இன்மை போன்றவற்றை ஐக்கிய இராச்சியம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
இந்தநிலையில் தற்போதைய பொருளாதார நிலைமை மனித உரிமை மேம்படுத்தலை திசை திருப்பாமல் இருப்பது முக்கியம்.
எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 46/1 உடன் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்தை தாங்கள் வலியுறுத்துவதாக இங்கிலாந்தின் நாடாளுமன்ற வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துணைச் செயலர் விக்கி ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்