இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இப்போதே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என 43ஆவது படைப் பிரிவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (29) தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை மற்றும் ராஜபக்சவும் அவர்களின் அடியாட்களும் ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வரை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ.போ.ச நிறுவனங்களை அவர்கள் நடத்தும் வரை, சர்வதேச அல்லது உள்நாட்டில் நம்பிக்கை இருக்காது, என்றார்.
எனவே, நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தாமல், அரச தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்காமல், நாட்டை இரத்தக்களரியாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | President Should Resign Without Causing Bloodshed
இலங்கை அடுத்த மாதம் செலுத்தவேண்டிய கடன்தொகை
இலங்கை அடுத்த மாதம் 25ஆம் திகதி 1,000 மில்லியன் டொலர் இறையாண்மை பத்திரங்களில் செலுத்த வேண்டியுள்ளது என்றும், ஏற்கனவே 250 மில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனம் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் இந்த வழக்கு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான ஆதரவில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள 43 ஆவது படைப் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்