புலம்பெயர்ந்து வாழும் இளைஞனுக்கு சரியான நேரத்தில் அடித்த அதிஷ்டம் - மகிழ்ச்சிக்கடலில் அவர்
புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளைஞன்
வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இளைஞன் தனது திருமணத்திற்காக பணத்தேவையை எதிர்பார்த்திருந்த நிலையில் அதிஷ்டக்காற்று அவர் பக்கம் அடித்துள்ளது.
அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் மிகப்பெரிய பரிசு விழுந்து அவரை மகிழ்ச்சிக்கடலில் தள்ளியுள்ளது.
கேரளாவை சேர்ந்த முகமது பொன்னம் குலம் என்ற 31 வயதான இளைஞரே 100,000 Dirham பணத்தை வென்றவராவார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முகமது அங்கு வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறார்.
புலம்பெயர்ந்து வாழும் இளைஞனுக்கு சரியான நேரத்தில் அடித்த அதிஷ்டம் - மகிழ்ச்சிக்கடலில் அவர்
திருமணத்திற்காக பணத்தேவை
இது தொடர்பில் முகமது கூறுகையில், திருமண நிகழ்வுக்கு பெரியளவில் செலவாகும் என்று உங்களுக்குத் தெரியும். இந்த பணத்தை சரியான நேரத்தில் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
என் திருமணச் செலவு தவிர, என் அம்மாவுக்கு தங்கத்தில் பரிசும் வாங்க விரும்புகிறேன். அத்துடன் என் தொழில் வளர்ச்சிக்கும் செலவிடுவேன் என கூறியுள்ளார். முகமது இந்தாண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்