மற்றுமொரு துப்பாக்கி சூடு - இளைஞன் ஸ்தலத்தில் பலி
மற்றுமொரு துப்பாக்கி சூடு
காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியை நபர் ஒருவர் கைப்பற்ற முயற்சித்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெலுவ காவல் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் காலி, நெலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
மேலும் 3 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காலிப் பிரிவு காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்