முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 615 ஆயுவமுறையை நோக்கி நகரும் இலங்கை .

மற்றுமொரு துப்பாக்கி சூடு - இளைஞன் ஸ்தலத்தில் பலி
மற்றுமொரு துப்பாக்கி சூடு காவல்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கியை நபர் ஒருவர் கைப்பற்ற முயற்சித்த சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் மொரவக பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெலுவ காவல் நிலைய அதிகாரிகள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் காலி, நெலுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் தப்பியோட்டம் மேலும் 3 சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெலுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காலிப் பிரிவு காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் தென் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இன்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?