கிளிநொச்சி நடு வீதியில் கதறி அழும் ஆசிரியையின் ஆதங்கம் (Video)
இலங்கை அரசாங்கம் அசிரியர்களுக்கு எந்த அடிப்படையிலும் முன்னுரிமை வழங்குவதில்லை என கிளிநொச்சியில் நடு வீதியில் அரசு ஆசிரியை ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் தெரியவருவது,
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆசிரியை ஒருவர் கடந்த மூன்று நாட்களாக பெற்றோலுகாக எரிபொருள் நிலையத்திற்கு வந்துபோவதாக பெற்றோல் இல்லாததால் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியை பேசிய காணொளி இதோ...
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்