Biloela நகரின் Flourish திருவிழாவில் பிரியா நடேஸ் குடும்பம்!
Flourish திருவிழா - பல்லின பல்கலாசார மக்களை ஒன்றிணைக்கும் கோலாகல திருவிழா. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள Biloela மற்றும் Gladstone நகரங்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் இசை, நடனம், சர்வதேச உணவு வகைகள் மற்றும் கலைக் கண்காட்சிகள் இடம்பெறுகின்றன.
Biloela பகுதியில் உள்ள பல்கலாசார மக்களை ஒன்றிணைக்கும் Flourish திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கோவிட் காரணமாக ஜூன் 11ஆம் தேதி இன்று நடைபெற்றது. அதில் பிரியா நடேஸ் குடும்பம் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டனர்.
சுமார் நான்கு ஆண்டு கால தடுப்பு காவலுக்கு பிறகு நேற்று Biloela திரும்பியுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினரை மகிழ்ச்சியோடு வரவேற்கும் முகமாக இன்றைய Flourish விழாவில் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
Biloela பகுதி பூர்வீககுடி மக்களான Gangulu பழங்குடி மக்களின் புகையிட்டு வரவேற்கும் பாரம்பரிய வரவேற்பு முறையுடன் பிரியா நடேஸ் மற்றும் அவர்களின் பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் வரவேற்கப்பட்டனர். பின்னர் Biloela Civic Centre விழா அரங்கிற்குள் அழைத்து செல்லப்பட்டனர் .
இன்றைய Biloela Flourish திருவிழா பிரியா நடேஸ் குடும்பம் திரும்பிய கொண்டாட்ட திருவிழாவாக களைக்கட்டியது
இன்றைய விழாவில் பல்லின மக்கள் பல்கலாசார ஆடைகள் அணிந்து வந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. Flourish விழா அரங்கிற்கு வெளியே கலைக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வழமையாக நடைபெறும் Flourish திருவிழா என்ற போதிலும் இன்றைய Flourish திருவிழா பிரியா நடேஸ் குடும்பம் திரும்பிய கொண்டாட்ட திருவிழாவாக களைகட்டியது.
வரவேற்புரையுடன் ஆரம்பமான இன்றைய Flourish விழாவில் நமது பாரம்பரிய இசை கருவியான வீணை இசை இசைக்கப்பட்டதுடன் கர்நாடக இசையில் பாடல்கள் பாடப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட பிரியா, Biloela சமூக மக்களுக்கு நன்றி கூறியதோடு தனது குடும்பம் Biloela மக்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாக மேடையில் உரையாற்றினார். தமிழில் அவர் ஆற்றிய உரை அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
பலவித கலாசார உடை அணிந்து பலர் கலந்துக்கொண்ட ஆடை அணிவகுப்பு நிகழ்வும் இன்றைய Flourish திருவிழாவில் நடைபெற்றது. அதில் நமது பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சேலை அணிந்து நடேசலிங்கம் பிரியா தம்பதியினர் கலந்துக்கொண்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தருணிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. தடுப்பு காவலிலிருந்து வெளியே தருணிக்கா கொண்டாடும் முதலாவது பிறந்த நாள் என்பதினால் அவரின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் சுமார் ஒரு வருடம் பெர்த் நகரில் சமூக தடுப்பில் வாழ்ந்து வந்த நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள லேபர் அரசு அவர்கள் Biloela திரும்ப அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த புதன்கிழமை பெர்த் நகரிலிருந்து பிரிஸ்பன் வழியாக நேற்று மதியம் மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela வந்தடைந்தனர்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பத்தின் தொடர் போராட்டம் Biloela மக்களின் ஆதரவு மற்றும் அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதே வேளை ஆட்கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக படகுகளில் வரும் எவரையும் தாம் நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும், அப்படியான படகுகள் தொடர்ந்து முன்புபோன்றே திருப்பி அனுப்பப்படும் என்றும் புதிதாக பதவியேற்ற லேபர்கட்சி அரசு கூறிவருகிறது.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்